Header Ads Widget

Responsive Advertisement

போன்ஸாய் மனிதர்கள்


கண்ணைப்பறிக்கும்

விசித்திர வண்ணமலர்கள்

ஆயிரமாயிரமாய் உண்டு

ஆனால் அவைகளில் வாசமென்பது என்றுமே

கேள்விக்குறியே!

மனிதர்களின் புறநிறங்கள்

சந்தன செஞ்சாந்திலிருந்து

தந்தத்தின் வெண்மைவரை ஆயிரமாயிரம் இங்குண்டு

ஆனால் மிதமான மனம்

இருப்பது இங்கே ஆச்சரியக்குறியே!எதைநோக்கிய தேடல் 

என்பதே தெரியாது ஓடிக்கொண்டிருக்கும் 

இவரின் இலக்கோ என்றுமே

புரியாத புதிரே!

தேடிச்சோறு தினம் தின்கின்றனர்

சின்னஞ்சிறு கதையைக்கூட உதடு

தாண்டாது காத்துக்கொள்ளும் திறமை

கண்டவர்கள் இவர்கள்

மன வாடல் மறைத்து 

முகவாடலை ஒப்பனையில்

மறைக்கும் வரம்பெற்றவர்!

தனிமனித சிறுசெயல்களும்

கட்டுப்பாட்டுக் கோட்டைக்குள் வைத்து

பூட்டிவைக்கும் விந்தை

இங்குதான் சாத்தியம்! இயற்கை அழைப்பைக்கூட

வரிசையில் சென்றே

கழிக்கும்அற்புதம் கற்றவர்!

புத்தனின் போதனையை

சத்தியமாய் ஏற்றதாலோ

என்னவோ.............. ஆசைப்படுவதேயில்லை அடுத்தவர்பொருளுக்கும்!

தத்தி நடக்கும் இளம்பிஞ்சு

தடுக்கியே விழுந்தாலும்!

தாயுள்ளம் திடுக்கிட்டு போகாத அதிசயமும் 

இங்கு மட்டுமே சாத்தியம்!

இதனாலேயே *பிஜு*  


எரிமலையும் மௌமானது

ஆட்டுவிப்பவனின் ஆனந்த

*வியாபாரமோ* “தடங்கலுக்கு வருந்தாது

தடபுடலாய் நடக்கின்றது”


*டோக்கியோ நகர் என்மனதில் விதைத்த உண்மை*        


🌹வத்சலா 🌹