Header Ads Widget

Responsive Advertisement

வியாபாரம்



பணமிருந்தால் மதிப்பிருக்கும் உலகத்திலே,,, 

பந்த பாசங்கூட சேர்ந்து வரும் அருகினிலே,,,


பொருளில்லா மனிதரிடம் குறை கண்டு

தினம், மாறி மனம் போகிறதே உறவினிலே,,,,


பொருள் சேர்க்க வியாபாரம் செய்து விடு,,,

அந்த பொருளோடு உன் வாழ்வை இணைத்து விடு,,,,


தனிமையிலே 

நீ வாழ துணை இருக்கும்,,,

அது தலை சிறந்த ஆளாக்கி கை கொடுக்கும்,,,,


பாரமென்று சொன்னவர்கள் யாருமில்லை,,,

உலகில்,

வியாபார 

சுகம் தானே 

மனிதன் 

இன்ப 

எல்லை,,,


இனிமையாக இதை நீயும் செய்திடுவாய் அரசு, வேலையின்றி போனாலும்

உயர்ந்திடுவாய்,,,


கூட்டாக ஒரு போதும் செய்திடாதே,,, வியாபாரம் செய்யாமல் போனாலும்

கவலையில்லை,,,


உன் வழியே உனக்கு என்று எழுதி வைத்த இறைவன்,

நீ, 

எடுத்ததெல்லாம் முடிக்கும் வரை துணையிருப்பான்!


பாலா