Header Ads Widget

Responsive Advertisement

காதல்

உயிருக்குள்

சிறகு கட்டி

உயரப் பறக்கும்


புயலுக்குள்

தென்றலனுப்பி

தலை வருடும்


புலி பாய்ந்து

வந்தாலும்

பூ கொடுக்கும்


எரிமலைக்கு

நடுவிலும்

குளிர் தரும்


எப்போதும்

வாழ்வுதனை

நெகிழ்வாக்கும்


தரைதனை

சமயத்தில்

வானம் செய்யும்


தலை தன்னில்

இமயத்தின்

பாரம் செய்யும்


நடுநடுவே

நிலவினுக்கு

அழைத்துப் போகும்


நிச்சயமாய்

நட்சத்திரக்

கவிதைப் பூக்கும்


காதலினை

தவிர்த்துவிட்டு

உயிர் வாழ்தல்


உணர்வுதனை

பிரித்து விட்டு

உடல் வாழ்தல்..!


- வெள்ளத்துரை