“இன்றைய என்நினைவில்”
::::::::::::::::;;;;;;;;;;;;;::::::::;
பனிபோர்த்திய மலையெல்லாம்
பகல் முழுக்க பச்சையாடைப்
உடுத்தி நின்ற விந்தைக்கோலம்!!!!!
சிந்தையில் போர்த்திய காலத்தை,
நேரம் நகர்த்தியது என்நினைவை!
இருபுறமும் ஓங்கி நின்ற பசுமைஅரண்களாய் இயற்கையின் வேலிகள் !!!!!!!
மழை வழுக்கிவிட்ட
மண்ணை இறுகபற்றிப்பிடித்த
விண்ணைத்தொட்ட மரங்களின்
வேர்கள் !!அவை மரத்துக்கும்
மண்ணுக்கும் உள்ள நெருக்கத்தின்
நிரந்தர பந்தத்தின் சாட்சிகள்!
மலைகுடைந்து சிலையமைத்தவரை
மலை குடைந்து சாலையமைத்தோர்
வழிமொழிந்தாரோவென வியக்க
வைத்த சுரங்கங்க வழிப்பாதைகள்!
*ஆறிலிருந்து அறுபது வரை
அனுபவப்பாடம் போல் ஆறு
மைல் முதல் அறுபது மைல் வரை
நீண்டன என்விழிகள் விரிய!
இன்றென்னவோ அதிசயமாய் அஸ்தமனமாக அடம் பிடிக்கும்
ஆதவனும்; வெண்ணெயாய்
வழுக்கிச்சென்ற என்
வாகனத்தை விரட்டியபடி பின்தொடர
இயம்ப முடியா கர்வம் என்தலைக்கே
ஏறிசிம்மாசனமிட்டாலும்........,!
என்மனம் சொன்ன மந்திரம்
இயற்கை உன்னையும் காதலிக்கிறது!⛩⛰🌞🌲🌹வத்சலா🌹🌲🌞⛰⛩