Header Ads Widget

Responsive Advertisement

மனசெல்லாம் நோகுதடி..!

          மனசெல்லாம் நோகுதடி..!
         - - - - - - - - - - - - - - - - - - -
கண்ணு கலங்கடி 
   கல் மனசும் கரையுதடி...!
கஜா, புயலு, ஒன்னு
  களவாடி சென்றதடி..
பாக்கு மரம் வீழ்ந்ததென்ன?
  பல மக்க பாடையில போனதென்ன?
தென்ன வீழ்ந்ததென்ன.?
  நம் மக்க தெருவாக நின்னதென்ன.?
பச்சபுள்ள அழுதபடி..!
   அது பாலு கேட்டு துடிக்குது.!
தண்ணி பாட்டில் நூறு ரூபா
   தவிட்டரிசி  இரு நூரு ரூபா
மக்க மருளுராங்க!
                  மனசெல்லாம் நோகுதடி.!
சொக்கா துணியுமில்ல
   சோறு போட நாதியில்லை.!
தங்க இடம் இல்ல என்
   தவிக்கும் வாய்க்கு தண்ணியில்ல.!

TV - ல் விளம்பரம் தான்
  எங்களை தீண்ட கூட நாதியில்ல
ஹெலிகாப்டர்ல பறந்து பாத்தா
   நாங்க படும்பாடு தெரிந்திடுமா.?

கவிஞர். பிறைநிலவன்
              ஊத்தங்கரை