🏠 🏠
தெருவுக்கே
அடையாளம் அந்த வீடு!
நீட்டோட்டு வீடென்பர்
திசைகாட்டும் கருவியாய்
திட்டமாய் அமைந்த வீடு !
சமயம்புரத்தம்மன கோவிலா
நீட்டோட்டுவீட்டுக்கு
மேற்கால!
தபாலாபிஸா நீட்டோட்டு
வீட்டுக்குதெக்கால!
பெரியங்காடியா நீட்டோட்டு
வீட்டுக்குகெழக்கால!
முருகன்டாக்கீஸாநீட்டோட்
வீட்டுக்கு வடக்கால
என அனைந்துக்கும் மத்தியி
அமைந்த அழகான வீடு
ஆறபடி ஏறினால் ஆளுயரக்
தேக்குக்கதவு வெண்கல
யாளி கைப்பிடியுடன்
கனமாய்க் கனக்கும்!
கதவுக்கு உட்புறம் பித்தளை
நாதாங்கி இருவடசங்கிலி
நாவசைத்து ஒளிரும்!
திரை விரியும்காட்சியாய்....
புத்துலகம் தெரியும்
நடுவாகமிகநீண்டதாழ்வாரம்
இருமருங்கிலும் நவ நவமாய்
பிரிவீடுகள் மனத்தளவில்
பிரிவினையில்லா வீடுகள்!
தமிழோடு தெலுங்கு, உருது,
மலையாளம,கன்னடம்இந்தி
மராத்தி,ஆங்கிலம்,பஞ்சாபி
என நவமொழிச்சங்கமத்துட
நான்கு சமயம் சேர்ந்த
கூடல் மா வீடு அது!
வீட்டுக்குள்அடிதடி நடந்தது
இல்லை ஆனால் அடிக்கடி
திருவிழாச்சந்தடிகளால் சந்தோஷஅலையடிக்கும்!
யாருக்குமில்லைசிடுசிடுப்பு!
மூத்தோருக்கு உண்டு
வரவேற்பு!
யாதும்ஊரே யாவரும்கேளிர்
எனும் உண்மைக்குதாரணம்
பதினெட்டுப்படிகள் அங்கு
தூண்களாய் மாறிய அதிசய
அரங்கம் அவ்வீடு!
மாதம்பிறந்து பத்தாம் நாள்
மட்டுமே என் பாட்டி வீட்டுக்காரம்மாவாய்
வாடகைசேகரிக்க அவதாரமெடுப்பார்!
மற்ற நேரத்தில் அவர்
ஜீவாம்மா தான்!
களைகட்டும் பொங்கல் !ஜொலிக்கும் தீபாவளிகள்!
நாவூறும் கிறிஸ்துமஸ்கள்!
மணமணக்கும் ரம்ஜான்கள்!
ஆண்டுவிழாக்கள்!
பிறந்த நாள் !மறைந்தநாள்!
என அனைத்தையும்
ஒருங்கே உணர்ந்த வீடு !காற்று கரைத்தகற்சிலையா
காலம் கரைத்தது அந்த
உறவுகளை!!
அந்த வீடு என் தாயகம்!
அந்த வானே என் தாய்முகம்!
ஏனெனில் அதன் பெயரே
“குட்டி பாரதவிலாசம்”!!!!
இந்த எண்ணஅலைகளோடு
தேடிச்சென்றேன் வழியறியா
குழந்தையாய்திணறினேன்!
பாரதவிலாசம் அங்கே
விலாசம் மாறி நிற்க !ஆத்ம
விசாரத்துடன் கண்கலங்க
நின்றேன் !நினைவுகள்
மட்டும் துணையாக !
🌹🌹வத்சலா🌹🌹