Header Ads Widget

Responsive Advertisement

அதிகாலை மழை


அதிகாலை மழை ஆனந்தமே

நெஞ்சில் ஊற்றெடுக்கும் பேரின்பமே

சோம்பல் கொஞ்சம் கூடிடுமே

கண்களும் கொஞ்சம் கெஞ்சிடுமே


சாலையெங்கும் சேற்றுச் சந்தனம்

செடிகளெல்லாம் மழைக்குச் செய்யும் வந்தனம்


அனைவரும் விரும்பி வேண்டிடுவார்

விடுமுறைக்காக ஏங்கிடுவார்

விடுமுறை கிடைத்தால் பெற்றோருக்கு திண்டாட்டம்

பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம்


அலுவலகம் செல்வோரோ முணங்கிய படியே செல்வாரே


பாதையோரக் கடைகளுக்கெல்லாம்

கவலை வந்து சூழ்ந்திடும்

மழை எப்போது நிற்குமென்று தோன்றிடும்


மழையும் நின்று போனதால்

வானம் வெளுத்துப் போனதே

வானம் வெளுத்துப் போனதால் 

தூக்கமும் கலைந்து போனதே


தி.பத்மாசினி