அதிகாலை மழை ஆனந்தமே
நெஞ்சில் ஊற்றெடுக்கும் பேரின்பமே
சோம்பல் கொஞ்சம் கூடிடுமே
கண்களும் கொஞ்சம் கெஞ்சிடுமே
சாலையெங்கும் சேற்றுச் சந்தனம்
செடிகளெல்லாம் மழைக்குச் செய்யும் வந்தனம்
அனைவரும் விரும்பி வேண்டிடுவார்
விடுமுறைக்காக ஏங்கிடுவார்
விடுமுறை கிடைத்தால் பெற்றோருக்கு திண்டாட்டம்
பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம்
அலுவலகம் செல்வோரோ முணங்கிய படியே செல்வாரே
பாதையோரக் கடைகளுக்கெல்லாம்
கவலை வந்து சூழ்ந்திடும்
மழை எப்போது நிற்குமென்று தோன்றிடும்
மழையும் நின்று போனதால்
வானம் வெளுத்துப் போனதே
வானம் வெளுத்துப் போனதால்
தூக்கமும் கலைந்து போனதே
தி.பத்மாசினி