Header Ads Widget

Responsive Advertisement

சாஸ்வதமல்ல


இருபது என்றார்கள்!
நாற்பது என்றார்கள்!!
இருப்பதை அள்ளிக்கொடுத்த எங்களின்
கண்ணீரைத்துடைக்குமா
நீங்கள் தரும் கணக்கு😭
வீட்டுக்கொரு மகனா?
தகப்பனா?கணவனா?
அண்ணனா?தம்பியா?
சித்தப்பனா?பெரியப்பனா?
மாமனா? மச்சானா? என
எத்தனை அவதாரங்களை
நாடுகாக்க மட்டுமே
நலமோடனுப்பிவைத்தோம்?
எங்கள்சொத்தெல்லாம்
மொத்தமாய் கொத்துக்
கொத்தாய் பிய்க்கப்பட்ட
கொடுமையைக் காணவா??
குங்குமம் எங்களுக்கு
சாஸவதமில்லை என்பதைத்
தெரிந்தே ஏற்றோம்—அது
உணர்வைக்கொன்று
உயிரைத்தின்னும் கயவரே
உங்களுக்குத்தெரியுமா?
உறவுப்பிணைப்புகளின்......
உன்னதமும்உதாரத்துவமும்
அழிக்கவேமுடியாத்தென்று?
நேரில்போரிட முடியாத
நம்பிக்கை துரோகிகளே...
நரித்தனம் செய்தே வென்றுவிட்டோமெனும்
நீங்கள் எல்லோரும்
சுவாசம் கொண்டிருப்பினும்
மரணித்தவர்களே!
ஒரே தாயின் வயிற்றில்தான்
பிறந்தோம் இருந்தும்.....
பாசமெனும் தாய்ப்பால்
உங்களுக்கு மட்டும்
எப்போது விஷமானது.......!
குங்குமத்தை சாட்சிவைத்து
எம் உறவுகளை போர்முனை
                      க்கனுப்பிய.....
எம் குலப்பெண்கள் தீர்க்க
சுமங்கலிகளே!!!
இத்தகுதியை அழிக்க நீவீர்
முயன்றுதான் பாருங்களேன்!
மூர்ச்சித்துப்போகும் உங்கள்
மூச்சுக்காற்றும்!!!
வெட்ட வெட்டத்துளிர்க்கும்
மூங்கில்மரங்கள் நாங்கள்
வேரடி மண்பிடித்து
நூறடி திருப்பித்தருவோம்??
துணிந்து வருகிறது எமது
அடுத்தத் தலைமுறை!!!
சத்தமின்றிச்சாக நீங்கள்
                          தயாரா?காரணம் ஒவ்வொருமுறை
                                  யும்....
எம் வீரர்கள் புதைக்கப்படு
                       வதில்லை...
விதைக்கவேபடுகிறார்கள்!!
ஏனெனில்”இமயங்கள்
இறப்பதில்லை”!!!
🌹🌹வத்சலா🌹🌹