மனிதநேயத்தை
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏழு காடு தாண்டி
கண்டுபிடிக்க வேண்டியதில்லை
பூமிக்கடியில் தோண்ட வேண்டியதில்லை
கடலுக்கடியில் தேட வேண்டியதில்லை
வானத்திலிருந்து வர வேண்டியதுமில்லை
மனிதநேயம் ஓர் உணர்வு
நம்மில் நாமே தேட வேண்டுமே தவிர
பிறரிடம் தேட வேண்டியதில்லை
பசியால் வாடுவோருக்கு
ஒரு பிடி உணவும்
பிணியால் துன்புருவோருக்கு
ஒரு துளி மருந்தும்
மானம் காக்க ஏழைக்கு
ஆங்கோர் ஆடை அளித்தலும்
மனித நேயமே
சுனாமியால் சுற்றம் இழந்தோரைக் கண்டால்
கண்ணில் நீர் பெருக்கெடுக்கிறதே
இதுவும் மனித நேயமே
சோமாலயாவில் உணவின்றி தவிப்போரைக்
கண்டால்
நம் கண் கலங்குகிறது
இதுவும் மனித நேயமே
மனிதநேயம் அனைவரிடமும் உண்டு
நாம் அதை துருப்பிடிக்க வைத்து விடுகின்றோம்
இனியாவது அதை பயன்படுத்தி
நல்லதொரு சமுதாயம் அமைத்திடுவோம்
இளைஞர்களையும் ஊக்குவிப்போம்
மண்ணில் எங்கும் மலரட்டும்
மாசில்லா மனிதநேயம்
தி.பத்மாசினி