Header Ads Widget

Responsive Advertisement

மனிதநேயம்



மனிதநேயத்தை
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏழு காடு தாண்டி
கண்டுபிடிக்க வேண்டியதில்லை
பூமிக்கடியில் தோண்ட வேண்டியதில்லை
கடலுக்கடியில் தேட வேண்டியதில்லை
வானத்திலிருந்து வர வேண்டியதுமில்லை

மனிதநேயம் ஓர் உணர்வு
நம்மில் நாமே தேட வேண்டுமே தவிர
பிறரிடம் தேட வேண்டியதில்லை

பசியால் வாடுவோருக்கு
ஒரு பிடி உணவும்

பிணியால் துன்புருவோருக்கு
ஒரு துளி மருந்தும்

மானம் காக்க ஏழைக்கு
ஆங்கோர் ஆடை அளித்தலும்
மனித நேயமே

சுனாமியால் சுற்றம் இழந்தோரைக் கண்டால்
கண்ணில் நீர் பெருக்கெடுக்கிறதே
இதுவும் மனித நேயமே

சோமாலயாவில் உணவின்றி தவிப்போரைக்
கண்டால்
நம் கண் கலங்குகிறது

இதுவும் மனித நேயமே

மனிதநேயம் அனைவரிடமும் உண்டு
நாம் அதை துருப்பிடிக்க வைத்து விடுகின்றோம்

இனியாவது அதை பயன்படுத்தி
நல்லதொரு சமுதாயம் அமைத்திடுவோம்
இளைஞர்களையும் ஊக்குவிப்போம்

மண்ணில் எங்கும் மலரட்டும்

மாசில்லா  மனிதநேயம்


தி.பத்மாசினி