Header Ads Widget

Responsive Advertisement

பொடிக் கவிதைகள்

தடை

கைம்பெண்ணின்
தலைமீது
அமர்வதற்கு பூக்கள்
ஒருபோதும் தடைசொல்வதில்லை
ஆனால் மனிதர்கள்தான்.........


இரட்டை இருட்டு

கணவனை இழந்த
கைம்பெண்ணின் இரவுகள் எல்லாம்
இரட்டை இருட்டுகள்!
ஒன்று இரவுக்கு
மற்றது அவள் வாழ்வுக்கு




கண்கள்

மௌனமாய்ப் பேசும் இரட்டைக் கவிதைகள்!


உதடுகள்

பல்முத்துகள் வைக்கப்பட்ட பவளப்பெட்டியின் இரட்டைக் கதவுகள்!


தொடர்வண்டி

போக்குவரத்தில் இது புதுமை!
ஆனால்
இரட்டை எல்லைக் கோடுகளுக்கு
அடிமை!


விழுதுகள்

தாய்வீடென்ற
ஆலமரத்தை விட்டு
மணமாகிச் சென்ற
தங்கைவீடு வரை
அண்ணனின் பாசம்
விழுதுகளாய்த் தொங்கி தங்கையை ஊஞ்சலாட்டும்!

த.ஹே