அண்டை வீட்டாருடன் நேயமே இல்லாத போது
எப்படி வளரும் மனிதநேயம்
பெற்றோரிடத்தில் நேயம் காட்ட முடியாத போது
அயலானிடத்தில் மட்டும் எப்படி மனித நேயம் காட்ட முடியும்
மனிதநேயமென்பது
அதிக செலவழித்து படிக்க வைப்பதோ
அதிக பண உதவி செய்வதோ இல்லை
பாசமான பார்வையும்
பரிவான பேச்சும்
அன்பான அரவணைப்பும் கூட மனிதநேயம் தான்
முடியாத முதியவருக்கு
முடிந்த வரை உதவுதல்
பார்வையற்று பாரில் உள்ள மக்களுக்கு உதவுதல்
வீதியிலே உலா வரும் அழுக்குற்ற
பிள்ளைகளுக்கு உணவளித்தல்
கர்ப்பிணிப் பெண்களோ
முடியாத முதியவர்களுக்கோ
பேருந்தில்
இடமளித்தலும்
மனிதநேயம் தான்
விபத்தில் அடிப்பட்டு
அலறிக் கொண்டிருப்பவரை
மருத்துவமனைக்குஅனுப்பாமல்
செல்பி எடுக்கும் விந்தை உகம்
மனித நேயமெங்கே
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே
தெரியாமல்
கைப்பேசியில் மூழ்கி கிடக்கும் காலமாயிற்று
ஆழிப் பேரலையும்
ஒக்கியும் கஜாவும்
சூறாவளியும் புயலும்
வந்தால் தான்
மனிதநேயம் பூ பூக்குமோ
பருவத்திற்கேற்ப மலர
மனிதநேயம் மல்லிகையும் அல்ல
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர
குறிஞ்சியுமல்ல
பூமியின் ஊற்றைப் போல்
மனிதருக்குள் தானாக ஊற்றெடுக்க வேண்டும்
மனிதநேயத்தை வளர்க்க முடியாது
அது ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கின்றது
வெளிக்கொணர மறுக்கின்றோம்
மனிதநேயம் மலர
மாற்றம் ஒன்றே போதும்
பிறரையும் தம்மைப்போல் நினைத்தாலே போதும்
குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்த்து
தனிமையை வெறுத்து கூட்டுக் குடும்பத்தை நேசிக்க பழக்குங்கள்
அன்னை தெரேசாவையும் காந்தியையும் கற்பியுங்கள்
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை சொல்லிக் கொடுங்கள்
மனிதநேயம் அங்கிருந்தே ஆரம்பமாகட்டும்
தி.பத்மாசினி