Header Ads Widget

Responsive Advertisement

தொட்டில்



கட்டிலின் பல்லவிக்குக்
கிடைக்கும் பரிசே
தொட்டில் .....ஆனால்
தவழும் மழலையின்றி
தனிக்காற்று துயில
ஊஞ்சலாடுகின்றன......!
கோயில் மரக்கிளைகளில்
ஏக்கம் மட்டுமே
ஏந்திழைகளின் விடையாய்....???
பிரார்த்தனை
நிறைவடைய வகைக்கொன்றாய் தொட்டில்கள்
விழுந்திடுமே
கோயில்
உண்டியல்களில்......!!!

வெள்ளித்தொட்டில்
வேண்டிய வரத்திற்கு......
தங்கத்தொட்டில்
தங்கச்சிலை பிறப்புக்கு....

பட்டுச்சரிகைத் தொட்டில்
பொக்கிஷம் கிடைத்த
                           தற்கு!
ஏழட்டுக்கு மாளிகையில்
வாரிசு கௌரவத்தொட்டிலாய்!
ஏழைக்குடிசையில் வாரிசு
எட்டுமடிசேலைத்தொட்டி
                                 லாய்!
காதலர் மனதில் என்றும்....
கனவேத்தொட்டிலாய்!
மாணவர் மனதில் அரிய
வெற்றியே தொட்டிலாய்!
பட்டம்பெற்றார் வாழ்வில்....
பணியேத் தொட்டிலாய்....!
பணியேற்றோர் நினைவினில்
திருமணமே தொட்டிலாய்!
திருமணம் புரிந்தோருக்கு....
குழந்தைவரமே தொட்டிலாய்.......
ஓ...... உலகம் உருண்டை
எனும் தத்துவம் மெய்ப்பிக்கப்படுகின்றதோ!!

🌹வத்சலா🌹