முட்டையிடுவதற்கு...
அடை காப்பதற்கு...
பிறந்த குஞ்சுகளுக்கு....
பத்திரமாய் ஒரு வீடு செய்யும் அலகு...
என்ன அலகு இது.
இதில் தான் எத்தனை அழகு....
தாயின் வலிக்கு நிகர்...
நிகரில்லை உலகிலென்பார்....
உணவுதேடத்தான் மரத்தைக் கொத்துகிறாய்
என நினைத்திருந்த என்
நெஞ்சுக்கு....
தன் இனத்தைக் காப்பதற்கு வீடு சமைத்தாயென நினைக்கும் வேளையில்....
இப்போதும் என் மனசு சொல்கிறது..
என்ன அலகு....
உன்னில் எத்தனை அழகு...
மரத்தையே கொத்தி வீடுசமைத்த உன் அலகில்....
சின்னதாய் ஒரு உணவுத் துணுக்கு...
அதுவும் உனக்கல்ல...
உன் சேய்க்கு...
என்ன அலகு...
இதில்தான் எத்தனை அழகு.
செம்மொழி.சிபிராம்
பெரம்பலூர்