மௌன விரதம்
என்று சொல்லி
கைப்பேசியில் மணிக்கணக்கில்
குறுஞ்செய்தி மூலம்
பேசிக் கொண்டே இருக்கிறாள்
+ + + + + + + + + +
முள்ளில்லாத ரோசாவைக் கூட
கண்டுபிடித்து விடலாம்
குத்தல் பேச்சு பேசாமலிருக்கும்
மனிதர்களை கண்டுபிடிப்பது கடினம்
+ + + + ++ ++ ++
கத்தியின்றி இத்தமின்றி
மற்றவர்களைக்
கொல்வது
கடுமையான
சொற்கள் தான்
தி.பத்மாசினி