Header Ads Widget

Responsive Advertisement

குறைகள்

நட்டு வைத்த
விதைகள்
யாவும்
நட்டப்படுவதில்லை..

விட்டுக்கொடுத்த
உறவுகள் யாரும்
விலகிப்
போனதில்லை..

கொட்டும் மழைகள் யாவும்
குறை
சொல்வதில்லை..

மனித மனங்கள்
மட்டுமே
ஒருவரையொருவர்
குறைகளையே
குற்றமாக்குவதில்
குறியாகிப்போனால்
வாழ்வதில்
குறைகளே
மிஞ்சும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..