Header Ads Widget

Responsive Advertisement

தமிழ் உழவன்



தொல்காப்பியம் வரை

தமிழை ஆழ உழுதவன் நீ!


தமிழ்நிலத்தில்

சோர்விலாது உழுது

உன் சிந்தனைவளத்தை

மும்மாரியெனப் பொழிந்து 

உன் தமிழார்வத்தை

உரமாக்கி

மொழிப்பற்றை காவல்வேலியாக்கி

மாடுகட்டிப் போரடித்தால் மாளா தென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை போல

கட்டுக்கடங்காத விளைச்சல் செய்தாய்!

அதன் விளைவாய் எங்களுக்கு எத்தனை எத்தனை

கவிதைகள் உரைகள் கட்டுரைகள் பாட்டுகள் கதைகள் நாடகங்கள் மேடைப்பேச்சுகள் கிடைத்தன!

சங்கத்தமிழ் இலக்கியங்களை உனது உரையென்ற 

படிக்கட்டுகள் வழியே மக்களைக்

கொண்டுசென்று சேர்ந்துவைத்தாய்!

அஞ்சுகத்தின் அருமைந்தனாய்ப் பிறந்து

தமிழன்னையின் மடியினிலே தவழ்ந்து வளர்ந்து

தமிழென்ற வயலை வளமாக்கி விளைவித்தப் படைப்புகளால் உலகையே வென்று என்றென்றும் மக்கள் மனங்களில் வாழும் தமிழ் உழவனே!

நீ பிறந்த இந்நாளில் உம்மைப் போற்றி வணங்குகிறேன்!


த.ஹேமாவதி

கோளூர்