Header Ads Widget

Responsive Advertisement

பல்லாண்டு சுகமாய் வாழ்வர்

உன்னை கருவில் சுமந்த தாயையும்

உன்னை தோளில் சுமந்த தகப்பனையும்

நீ கையில் சுமக்க வேண்டாம்

அவர்கள் உனக்கு சுமைகள் அல்ல

அவர்கள் உனக்கு சுகங்கள்

நீ அவர்ளை சுமையென நினைத்தால்
உன் வாழ்வு சூன்யம்

நீ அவர்களுக்கு பால்சோறே உண்ணக் கொடுத்தாலும்
பழரசமாய் கொடுத்தாலும்
அது அவர்களுக்கு விடம் தான் உன் அன்பில்லாத போது

உன் அன்பான பேச்சும்
பரிவான பார்வையும்
நேசத்தோடு பக்கத்தில் அமர்ந்தால்
அந்த இன்பத்தில் பல்லாண்டு சுகமாய் வாழ்வர்

தி.பத்மாசினி