Header Ads Widget

Responsive Advertisement

புன்னகை - பாலா



புன்னகையில் பூ பூக்கும் தனி மலரே!
வண்டு,
தேன் குடிக்க வரும் பொழுது கண்ணயரு,,,,
மெல்ல வரும் பூங்காற்று உன்னழகில்,
தென்றலாகி நாணத்தோடு திரும்பி வர,,,
நீ,
புன்னகையில் பூ பூக்கும் தனி மலரே!

வெண்பனியும் உன் மேலே ஆசை வைத்து,
விடிந்தவுடன் மறைவதும் நாணத்தினாலோ!
தன் வழியில் செல்கின்ற சந்திரன் கூட
உன்,
புன்னகையில்
வளர்ந்து விட்டு தேய்ந்து போனானோ,,,,

என் வழியும்,
நீ உதிர்த்த புன்னகையாலே
நல்வழியில்
போக நானும் நாளும் கண்டேனே,,,,
விண்வெளியும் உன்னிடத்தில்
புன்னகை கேட்டு
மாலை வரை
காத்து நின்று மயங்கி போனதே,,,

கண்வழியே கண்டதெல்லாம்
சொல்ல கம்பனுமில்லை
உன் ,
புன்னகையில்
மகிழாத சுப்பனுமில்லை,,,
வெளி நின்ற திருமேனி யார் காணுவார்?
கண்டால்,
ஒளி கொண்ட புன்னகையில் தான் வாழுவார்!

பாலா,,,