Header Ads Widget

Responsive Advertisement

தந்தை பெரியார்


திராவிட தீச்சுடர் தந்தை பெரியார்


நாத்திகம் பேசியவரே
நாசூக்காய் நடப்பபவரே
நாட்டை பண்படுத்த வந்தவரே

தம் கொள்கையிலிருந்து மாறாதவரே
மற்றவர் கருத்துக்கும் மதிப்பளிப்பவரே
மதி நிரம்பப் பெற்றவரே

திராவிடர்களின் எழுச்சியே
தியாகச் சுடரே
தீண்டாமையை ஒழித்தவரே

பெண்ணுரிமை காக்க வந்தவரே
பெண்ணுக்கும் சம உரிமை தந்தவரே
பெண்கல்வியை போற்றியவரே

கருப்புச்சட்டை அணிந்தவரே
கள்ளுண்ணாமையை வற்புறுத்தியவரே
கழகத்தை திராவிட கழகத்தை தோற்று வித்ததவரே

அரசியல் வித்ததகரே
முதலமைச்சர்கள் பலரை உருவாக்கியவரே
எப்பதவிக்கும் ஆசைப்படாதவரே

அறிவுப் பெருத்தவரே
ஆக்கம் பல செய்தவரே
இன்றும் அனைவர் மனதிலும் வாழ்பவரே

சமூக சீர்திருத்தம் செய்தவரே
திருமணத்திலும் சீர்திருத்தம் ஆற்யவரே
எழுத்திலும் சீர்திருத்தப் புரட்சி கண்டவரே

இன்றும் உம் தடியும் கண்ணாடியும்
யாரையோ அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது

நீர் மறைந்தாலும்
உம் சிந்தையாலும் எழுத்தாலும்
மமக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்

தி.பத்மாசினி சுந்தரராமன்