எல்லாமே இருந்தும்
எதுவுமே இல்லாதது போல்
ஒரு நீண்ட நெடும்பயணத்தை
நிலையற்ற வாழ்வில்
மேற்கொண்டுவிட்டேன்
அநாதையாய்........
யாருமே இல்லாத இடத்தில்
யாசகம் பெறத்தயாராகிவிட்டேன்!
கடந்த காலநினைவுகளைச்
சற்றே திரும்பி பார்க்க
மிக நுண்ணிய ஆசை உண்டு!
இழந்துவிட்ட நிம்மதிக்கு
வாழ்க்கைச்சரிதம் வாசித்தாலும்
வரிமட்டுமே நிரந்தரமாய்
மிஞ்சிவிடுமோ என்ற
நினைப்பே திகிலைத்தருகின்றது!
காலம் தந்த காயத்தின் வலியை
காலமே மாற்றும் என்கிற
துணிவில் தொடருகிறேன்
என் பயணத்தை மீண்டும்
தனிமையில்.......!
🌹🌹வத்சலா🌹🌹