அரசியலுக்கு அடிபணியா நீதி தேவை
ஆர்ப்பாட்டம் இல்லாத வீதி தேவை
இதயத்தைக் காண்கின்ற சக்தி தேவை
ஈன்றவர்க்கும் பிள்ளையன்பில் பாதி தேவை.
உன்னையே நீ அறியும் அறிவு தேவை
ஊரார்கள் போற்றிடும் வாழ்வு தேவை
எந்நாளும் குறையாத அன்பு தேவை
ஏன் என்று கேட்டிடும் வலிமை தேவை.
ஐயமே கொள்ளாத நட்பு தேவை
ஒன்றுக்குள் ஒன்றாகும் உறவு தேவை
ஓங்குபுகழ் அளிக்கின்ற கல்வி தேவை
ஔடதம் நாடாத வாழ்வு தேவை.
தேவைகள் பல வந்து முன் நின்றாலும்
தேவைப் படாத ஓர் மனது தேவை
தேவையில்லை என்று சொல்லிநிற்கும்
திடமான மனம் கொண்ட வாழ்வு தேவை.
*சுலீ. அனில் குமார்.