காதலுக்கு சாட்சியாக காதலிக்குத் தோழியாக
நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.
குழந்தையின் அழுகை நிற்க
பிள்ளைக்குச் சோறூட்ட
நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.
இரவினிலே குளிர்விக்க, படகினிலே ஒளியூட்ட
நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.
மண்ணில் நின்று விண்ணை நாடி
பூமியுடன் உறவு தேடி
சென்றிருக்கிறது சந்திராயன், அவன் சென்று சேரவில்லை.
வரவேற்க ஆள் வேண்டும்
உபசரிக்க நாள் வேண்டும்
ஆகவே காதலரே, அன்னையரே, மானிடரே
நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.
*சுலீ. அனில் குமார்.*