மென்மையான நாவில் வன்மையான சொற்கள் பிறக்கும்போது நாகாக்க என்ற வள்ளுவனின் கடிவாளம் பூட்டுவோம்!
தீயவற்றைக் காணும்போதும்
பேசும்போதும்
கேட்கும்போதும்
காந்திமகானின் மூன்று குரங்குபொம்மைகள்
என்ற கடிவாளங்களைப் பூட்டிக்கொள்வோம்!
மதுவென்ற போதையின் பாதையிலே செல்ல துடிக்கின்ற கால்களுக்கு மனக்கட்டுப்பாடு என்ற கடிவாளம் பூட்டுவோம்!
இயற்கையைச் சீரழிக்கும் செயல்களைச் செய்பவரைப் பார்த்தால் எச்சரிக்கையும் விழிப்புணர்வும் என்ற இரட்டைக்கடிவாளத்தைப் பூட்டுவோம்!
நாளைய நம் வாரிசுகள் நலமாய் வாழ
இப்போதே நீர்வளம் காத்திட குடிநீர்சிக்கனம் என்ற பொறுப்பான கடிவாளம் பூட்டுவோம்!
த.ஹேமாவதி
கோளூர்