ஓர் மரம் விழுந்து விழுந்து விழுதுகளை உருவாக்குவது
தன்னை காக்க அல்ல
தன் கிளைகளை தாங்கிப் பிடிக்கவே
அதுபோல் பெற்றோரும் தம் பிள்ளைகளை விழுதுகளாய் உருவாக்குவது
தன்னைக் காக்க அல்ல
இந்த நாட்டை தாங்கிப் பிடிக்கவும்
உடன் பிறந்தோரை தாங்கிப் பிடிக்கவும்
உண்மையை தாங்கிப் பிடிக்கவும்
நேர்மையை தாங்கி பிடிக்கவும்
அன்பை தாங்கி பிடிக்கவும்
தள்ளாத வயதில் தடுமாறும் முதியோர்களை தாங்கிப் பிடிக்கவும்
வறுமையில் வாடுவோரின் வாட்டம் போக்கவும்
அனிதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டவுமே
தம் பிள்ளைகளை விழுதுகளாய் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்
தி.பத்மாசினி