அன்னையாக இருந்து பார் அன்பு புரியும்,
அப்பாவாக இருந்து பார் கரிசனம் புரியும்,
ஆசானாக இருந்து பார் கடமை புரியும்,
நண்பனாக இருந்துபார் நட்பு புரியும்,
வாக்காளனாக இருந்து பார் ஏமாற்றம் புரியும்,
நடிகனாக இருந்து பார் போலித்தனம் புரியும்,
கவிஞனாக இருந்துபார் காட்சிகள் புரியும்,
மனிதனாக மாறிப்பார்
மனித நேயம் புரியும்,
உனக்குள் நீ உற்றுப்பார்
நீ யாரென்று புரியும்,
உலகம் உனதென்று புரியும்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*