Header Ads Widget

Responsive Advertisement

கிளம்புகிறாய்; புலம்புகிறேன் - பொன் ரவீந்திரன்

ஒரு பெருமழைநாளின் பின்னந்திப்பொழுது
உந்தன் வாகனத்தில்
அழைத்துச்செல்கிறாய்...
செல்லம்மா..!
எனைக்குளிப்பாட்டுகிறது
உன் கூந்தலின்நுனியில் வழிந்திறங்கிய
ஆகாயகங்கை...!


அத்தனை விரைவிலா வந்து சேரவேண்டும்...
நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்...?
நீ கிளம்புகிறாய்
நான் புலம்புகிறேன்
நிகோட்டின்புகையோடு...!
*பொன்.இரவீந்திரன்*