Header Ads Widget

Responsive Advertisement

முள் - சுகந்தீனா



மாந்தர்களே...

என்னை
குத்திவிடும்
முள்தானென்று
ஏளனமாக
நினைத்துவிடாதீர்கள்

சமகாலத்தில் வாழும்
ஒருசில மாந்தர்களின்
சொல்லை விட நான்
மதிப்பிற்குரியவனே

குறைகளை மட்டுமே
காணும் மாந்தர்களா
நீங்கள்..?

இனியாவது
மாற்றிக்கொள்ளுங்கள்
உங்கள் பார்வைகளை

நான் ஒரு
காக்கைக்கு
கிடைத்தால்
கூடுகட்ட
உதவிடுவேன்

ஒரு பேதையின்
கையில் இருந்தால்
கடும் பொழுதில்
அவள் மானம்
காத்திடுவேன்

என்னை சேகரித்து
வேலியாக்கிப்
பயன்படுத்துவீர்களானால்
ஒரு சேனையில்லா
பாதுகாவலனாக
அனைத்து இடங்களிலும்
பயன்படுவேன்

நான் முற்களானாலும்
இன்னும் பற்பல
இடங்களில் பயன்படவே
செய்கிறேன்

சில மாந்தர்களின்
பயனிலா சொற்களைப்
போல் அல்லாமல்

என்னை குத்தும்
முள்தான் என்று
ஏளனமாக
நினைத்துவிடாதீர்கள்

✍️கவி ரசிகை......
           ......சுகந்தீனா