Header Ads Widget

Responsive Advertisement

தமிழ்நாடு- வத்சலா


தன்னிகரில்லா நாடு
உலகம் வியக்கும் நூல்உண்டு!
உண்மைத்தலைவர் ஆண்டதுண்டு!
முப்புறமும் அலையாடும்கடலுண்டு!
முப்போகம் விளைவித்த ஆறுண்டு!
வித்தைபல கற்பிப்பது உண்டு!
வினை தீர்க்க பல மூலிகையுண்டு!
அத்தனைக்கும் தாயான தமிழுண்டு!
ஆறுதல் தரும் கவின் மலையுண்டு!
இனிமையாய் ஆர்ப்பரிக்க அருவியுண்டு!
எழில் முத்துவளம் தருவதுண்டு!
தென்பொதிகைச்சாரலுமுண்டு!
குமரியின் கதிரவன் உதயமுண்டு!
காசை கரியாக்க சிவகாசியுண்டு!
கரியையும் காசாக்கும் நகருமுண்டு!
வசதிக்கு வளையாத நீதியுமுண்டு!
சுற்றம் சேரவே திருவிழாக்களுண்டு!
அலுப்பு. அகல பாரதி பாட்டுண்டு!
சாதீயம் பார்க்காத மனங்களுண்டு!
சாவையும் வெல்ல மருத்துவமுண்டு!
அன்பின் பண்டமாற்று நடப்பதுண்டு!
இன்றோ..........?
தன் மொழிக்காக உரிமைக்காக
தார்மீக போராட்டம் நடப்பதுண்டு!
சுயநல அரசியலாளர் நடத்தும்
குரங்காட்டி வித்தைக்கு வழிவிட
ஒவ்வொரு தமிழனும் வாசற்கதவை
ஓடிவந்து திறப்பதுண்டு!
இளைய சமுதாயமே விழித்துக்கொள்!
இணையத்தால் தமிழை தமிழ்நாட்டை
உயர்த்தும் உத்தியை வளர்த்துக்கொள்!
*இணைய செயலிதனை உலகிற்கே
பிச்சை போட்டவன் தமிழன் தான்*
என்பதையும் ஒத்துக்கொள்!
மாற்றத்தை உன்னிலிருந்தே துவங்க
தேற்றம் தெளிவு கொள்!
ஒப்புயர்வற்ற தமிழ்நாடு பிறக்கும்!
தளரா உழைப்பை முதல் போடு!
தன்னிகரில்லா தமிழோடு நடைபோடு!

🌹🌹வத்சலா🌹🌹