நன்றாக இரு மகனே(ளே)என்ற நல்லோர் வாய் வார்த்தை
சென்று வா, வென்று வா என்று வாழ்த்துகின்ற வார்த்தை,
வாழ்க, வளர்க என்ற மனம் நிறைந்த வார்த்தை
யாமிருக்கப் பயமேன் என்ற நம்பிக்கை வார்த்தை,
வீணையடி நீ என்ற பாரதியின் வார்த்தை
எங்கிருந்தாலும் வாழ்க எனும்
காதலர் தன் வார்த்தை,
ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராசர் வார்த்தை
நல்லதென்றும், மகிழ்ச்சியென்றும் சொல்லுகின்ற வார்த்தை
நண்பேன்டா என்று சொல்லும் நண்பர்கள் வார்த்தை
கவலைப்படாதே என்ற கருணைமிகு வார்த்தை,
கண்டேன் சீதையை என்ற ஆஞ்சனேயர் வார்த்தை
இன்று போய் நாளை வரச் சொன்ன இராமர் வார்த்தை,
எத்தனையோ வார்த்தைகள் இருக்கிறது
தரமாக
அனைத்துமே பல நேரம் வாங்கி வந்த வரமாக,
அனைத்துமே பல நேரம் வாங்கி வந்த வரமாக.
*கிராத்தூரான்*