இருக்கவேண்டும் அனைவருக்கும்,
இல்லாது போனது
இருக்க வேண்டிய நேரத்தில்,
காணாது போனது.
மதம் அனைத்தும் சொன்னது
மதம் பிடித்தோர் மறந்தது.
இதமளித்து நிற்பது
இறைக்கு நிகர் குணமது.
பொறுமையைக் கடைபிடித்தோர்
பெருமை பெற்றார் சரித்திரம்
உணர்ந்தாலும் கடைபிடிக்க
முடியவில்லை விசித்திரம்.
ஓடு மீனை ஓடவிட்டு
உறுமீன் வரும்வரை
காத்திருக்குமாம் கொக்கு
பொறுமைக்கோர் எடுத்துக்காட்டு.
பொறுத்தார் பூமி ஆள்வார்
முன்னோர்கள் சொன்னது
வறுமையிலும் பொறுமை காத்தல்
மனிதருக்கு நல்லது.
பொறுமையோடு இருந்தவரைப்
பொறாமையோடு பார்க்கிறேன்
பொறுமை வேண்டும் நினைக்கிறேன்
முடியாமல் தவிக்கிறேன்.
பொறுமை வேண்டும் நினைக்கிறேன்
முடியாமல் தவிக்கிறேன்.
*கிராத்தூரான்*