Header Ads Widget

Responsive Advertisement

பொய்யெனும் போர்வை.



வஞ்சகம் சூதும் வாழுது நெஞ்சில் வஞ்சகம் சூதும் வாழுது,,,
ஒன்னா? ரெண்டா இருக்குது,,,,?
அதுகள்
ஒன்னா ரெண்டும்
இருக்குது,,,,!

அஞ்சில் வளைய ஆளேது?
நெஞ்சை நிமிர்த்து நிற்கையிலே,,,!
தஞ்சம் புகுந்த நேரத்திலும்
வஞ்சகமாக வரவழைக்கும்
நெஞ்சமெல்லாம்,
என்றும்
வஞ்சகம் சூதும் வாழுது,,,
அதுகள் ரெண்டும் ஒன்னா தானே இருக்குது,,,,

கண்ணில் நிறைய பொய் வைத்து,
வாயில் உமிழும் வார்த்தையெல்லாம்
தாய், சேய் நலம் பார்ப்பது போல் பாவணையில்,
நோய் கொடுத்து தான் நிற்கும்,,,
பொய்யெனும் போர்வையிலே
புறம் பேசி மகிழ்ந்திருக்கும்,,,
மெய்யென நானிருக்க
மேதினியில் எப்போது?

தீயென சுட்டு விட
தீயன
மறைந்தது போல்,,,
மாயனை நான் கண்டேன்
மற்றவை பறந்தோட,,,
சேயென தேற்றி
என்னை,
வாயென வாயில்
நிற்க,,,
பொய்யெனும் போர்வையெல்லாம்
பல தையலால்
ஆனதென்றான்,,,,

மெய்யலை
மேனியிலே
மேவிய மாயனவன்
பொய்யெனும் போர்வை தரித்த
பல போலி தையல்களை
மெல்ல
பிரித்தெடுத்து
மெளனத்தில்
வேலியிட்டான்,,,

வாடா மலரெடுத்து
வாடா என்று சொல்லி
என்னை,
மூடா
போர்வையாலே
யாரும் தேடா
ரகசியமாய்,
உலகில்
பாடாய் படுத்தி
என்னை
கூடா நட்பில் தானே
நீயும், பல
குறைகள்
கண்டாய்
என்றான்!

பாலா,,,