அவளின் விரல்கள் பட்டதால்
மண்பானையும் அழகானது!
தீயின்மீது வைத்தப்போதும்
அவளைப் பார்த்துச் சிரித்தது!
வாய்திறந்துச் சிரிக்கையிலே அவள் வாய்நிறைய நீரூற்றி பச்சரிசி போட்டுக் கொதிக்கையிலே
மல்லிகையாய்க் குழைந்து வெம்மையிலும்
தன்னன்பை வெளிப்படுத்திய பானைக்கு மேலும் பரிசாக தித்திக்கும்
வெல்லத்தைப் பொடித்துப் போட்டாள்!கூடுதலாக முந்திரிகளையும்
திராட்சைகளையும்
நெய்யில் குளிப்பாட்டிச் சேர்த்து கமகமக்க ஏலக்காயைச் சேர்த்து
*பொங்கலோ பொங்கல்* என்ற அவளது கூக்குரலைக் கேட்டதும் இன்னும் ஆனந்தமாகிய பானைக்குப் பெருமை பிடிபடவில்லை!
பொங்கும் அழகுடையாள் என்னையும் பொங்கவைத்தாளே என்று பெருமிதப் பட்டுக்கொண்டது!
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
🙏💐💐💐💐💐💐🙏
த.ஹேமாவதி
கோளூர்