Header Ads Widget

Responsive Advertisement

பிரிதலும் பிரிதல்நிமித்தமும் -ஹேமாவதி


பனிக்கொட்டும் இரவிலே 
போர்வைக்குள்
கிடந்தாள் ஒருத்தி இங்கே!
அவள் கொழுநனோ
பனிமழையில் நனைந்தபடி நாட்டின் எல்லையிலே அங்கே!
பெற்றோர்கள் நிச்சயிக்க உற்றமும்சுற்றமும்
சூழ்ந்திருக்க 
மலைக்கோயிலிலே
அவனுக்கும் அவளுக்கும் இருபதுநாள் முன்புதான் திருமணமே நடந்தது!
இல்லறத்தின் இன்பத்தைச் சுவைக்கத் தொடங்கினார்கள்!
உனக்கு நான் எனக்கு நீ எனதனிஉலகில் மகிழ்ந்திருந்ந வேளையிலே ஓலைதேடி வந்தது அவனுக்கு இராணுவத்திலிருந்து!
விடுமுறை முடியுமுன்னே தேசம்காக்க புறப்படு இன்றே என்று!
அரற்றினாள் புத்தம்புது மனைவி!
மையிட்ட கண்கள் நீர்க்குளங்களாக
மஞ்சளில் குளித்தமுகம் சோகத்தால் இருள
புரண்டாள் கட்டிப் பிடித்தாள் அடம்பிடித்தாள்!
இராணுவவீரன் அவன்நிலையோ சொல்லமுடிய வில்லை!
விளையாட்டுப் பொம்மையை குழந்தையிடமிருந்து 
வெடுக்கென பிடுங்கினாற்போல
பரிதவித்தான் துடிதுடித்தான் ஆனாலும் அழவிவில்லை தேசங்காக்க புறப்பட்டுவிட்டான்
அந்த இளஞ்சிங்கம்!
ஆசைகளைக் கட்டுக்குள் அடக்கி
தேசநலனை மனத்திலிருத்தி
பார்வையாலே அன்பான தன்இல்லக்கிழத்திக்கு
ஆறுதலும்தேறுதலும்
கூறினான்!
அழாதே கண்மணியே தேசம் பெரிதல்லவா?
தேகங்கள்தானே இப்போது பிரிய போகிறது!
மனங்களில்லையே!
தொலைவென்பதும்
நம்தேகங்களுக்கே
மனங்களுக்கில்லையே
நான்செல்வது நாம்பிரிவதற்காக அல்ல
நம்தேசம் காக்க!
பகைவெல்ல!,
இப்பிரிவைப் பழக்கிக் கொள்!
இனிஇதுபோல் பலமுறை பிரிவுகள் நமக்குள் வரும்!
திடீரென ஒருநாள் வீரமரணமடைந்துவிட்டேன் என்றதகவலும்கூட வரலாம் 
மனத்திடங் கொள் என்கண்மணியே என்றவனை மேலும் பேசவிடாது கட்டித் தழுவினாள் அவள்!
விழியாலும் மொழியாலும் தன்னிரண்டு தேனிதழாலும் மலர்விரலாலும் பலவாறு அவனுக்கு தன்னன்பை மொத்தமாய் முத்தமாய் வழங்கி சென்றுவாருங்கள்!
பிரிவோம் தேசத்தின் பொருட்டு!அதுவரை நான் காத்திருக்கிறேன்
என்றாள் தெளிந்தமனதுடன்!
அப்போது அவளுக்கு தன்தமிழ்இலக்கணத்தில்
பாலைத்திணை பற்றி படித்தது நினைவில் வந்தது
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

த.ஹேமாவதி
கோளூர்