Header Ads Widget

Responsive Advertisement

மார்கழி பிம்பங்கள் - வத்சலா



இளங்காற்று இல்லை இனி
குளிர்காற்று தான்
என்றபோதும்.......
இம்மாத பெருமை பெரியதே
 விழாக்களைத்தாங்கிய
வீதிகள் எல்லாம்
விழாத்தலைமை ஏற்கும்
வீதிகளாய் மாறிவிடும்!!!
வாசல்தோறும் கோலங்கள்!!
வகைக்கொன்றாய் பூத்திடும்
ஓரிழையில் ஒற்றியெடுத்த 
ஒப்பற்ற கோலம்!!!
ஈரிழையில் நெஞ்சை
ஈர்த்துவிட்ட கோலம்!!!
நெடும்புள்ளி வைத்த
நேர்த்தியான கோலம்!!!
இடைப்புள்ளி பெற்ற
இணையில்லா கோலம்!!!
புள்ளி தொடாது
புன்னகைக்கும் கோலம்!
புள்ளிதொட்ட போதும்
பூத்துச்சிரிக்கும் கோலம்!
மானும் மயிலும் மீனும்
மயங்கிச்சிரிக்கும்!!!
கமலமும் அல்லியும்
கவிதை பாடும்!!!
இன்னிசைக்கருவிகள்
மௌனராகம் மீட்டும்!
கிளியும் மைனாவும்....
அன்னமும் அசைந்தாடும்!
நாட்டியப் பெண்கள்
நர்த்தனமாட...
அழகிய அரவமும்
படம்விரித்நாடும்!
சுடர்ஒளிரும் பல 
விளக்குகளோ வாழ்வின்
விளக்கங்கள் காட்டும்....!!
தேர்க்கோலம்!
மடிக்கோலம் !படிக்கோலம்!
திருமகள் கோலம்!
அப்பப்பா வாழ்வியலின்
அனைத்துத்தத்துவங்கள்!!
கோலங்களாய் ்்்
சாண உருண்டை மேல்
பூசணிப்பூவாய்
உணர்வில் கலக்க ....
வந்தாளே மார்கழி!!!
தீமை இருளகற்றி!
நன்மை ஒளியேற்றி!
நீயே எமை என்றும்
ஆதரி!

🌹வத்சலா🌹