செடியொன்று மொட்டொன்றைத் தருவதைப் போன்று,
மொட்டொன்று மலராக விடர்வதைப் போன்று,
மலரொன்று காயாகத் திரிவதைப் போன்று,
காயொன்று பழமாகக் கனிவதைப் போன்று
தொடங்க வேண்டும் புதிதாக வாழ்க்கையில் உறவுகள்.
உரமிட்டு நீர் பாய்ச்ச வளரும் சில உறவுகள்,
நீர் மட்டும் விட்டுவர துளிர்க்கும் சில உறவுகள்,
நீரின்றி உரமின்றிச் செழிக்கும் பல உறவுகள்,
கருகாமல் முறியாமல் தொடரும் அந்த உறவுகள்,
வேர்விட்டு விழுதூன்றி நிலைக்கும் அந்த உறவுகள்.
நீர் வேண்டும் வேளையில் நீரூற்ற வேண்டும்
உரம் நாடும் போதினில் வளம் சேர்க்க வேண்டும்
நடுவதோடு நிற்காமல் தொடர் கவனம் வேண்டும்
தொடக்கமுடன் நிற்காமல் தொடர்ந்து செல்லவேண்டும்
தோட்டம் அது தோப்பாகக் காட்சியளிக்க வேண்டும்.
காண்போரின் கண்கள் அதைக் கண்டு மகிழவேண்டும்
அது போன்ற தோப்பாக மாற முனையவேண்டும்
தோப்புகளோ வனமாகும் காலம் வரவேண்டும்
வனம் நிறைந்த வளம் நிறைந்த வாழ்வு வாழ வேண்டும்
தொடங்கும் புது உறவுகள்...
தொடங்கும் புது உறவுகள்
இதை நினைவில் கொள்ளவேண்டும்.
*சுலீ. அனில் குமார்.*