இரவும் பகலும்
இணைந்ததே நாளாய் அமைவதுபோல்
இங்கே
நிசமும் கற்பனையும் இணைந்தே மனிதவாழ்வாய் அமைகிறது!
நிசத்தால் அடையமுடியாததெல்லாம்
கற்பனையால்
அடைந்து மகிழும்நிலையில் பலரது வாழ்விங்கே!
முடவனும் கொம்புத்தேனுண்டு
மகிழ்வான் கற்பனையில்!
இல்லாத அடையாத ஏக்கங்களெல்லாம்
அடையவைக்கும் திறன் கற்பனைக்குண்டு!
நிசங்களோடு கற்பனையும் கண்டு
கற்பனையை நிசமாக்கும் வழிகள் காண்போம்!
த.ஹே
கோளூர்