Header Ads Widget

Responsive Advertisement

குழந்தைகளுடன் ஒரு தேவதை ... தெய்வானை

கள்ளமில்லாச்சிரிப்பின்
சொந்தக்காரர்கள் அவர்கள் ...

பக்கம் அமர்த்திக் கற்றுத்தரப் பற்றிக் கொள்ளும் கற்பூரம் அவர்கள் ...

ஆடை ஒன்று புதிதாய் அணிய
அழகாய் இருக்கிறது  அம்மா  ...

என்று மகிழ்ந்து சொல்லும்
தேவதைகள் அவர்கள் ..

முகம் கொஞ்சம் வாடினாலும்
மனம் தாங்காது சுற்றிவந்து ...

உடம்புக்கு நலம் இல்லையா ..
உணவு கொண்டீர்களா இல்லையா ..

என்று கேட்டு நம் நலம் விரும்பும் தாயும் தந்தையும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிச்சுற்றி வந்து அன்பு தந்து
சுற்றமும் சூழலும் ஆனவர்கள் அவர்கள் ..

சுற்றிலும் அவர்கள் சூழ்ந்திருக்க..
நடுவாய் அமர வரம் பெற்றவர்கள் ....

இளமை என்றும் மாறாத
தேவதைகளின் தேவதைகள். ...

              தெய்வானை,
                  மீஞ்சூர்.