வாழையிலையில் உணவு..
நம்முன்னோர் கொண்ட அறிவு...
சுடச்சுட இலையில் உணவும்..
கூடவே சேரும் பச்சையமும்...
உயிர் வாழவைக்கும் அமுதம் ...
உணர்ந்து கொள்வோம் நாமும் ...
தூய்மை செய்யும் பொருட்கள்
உணவுக் கலன்களில் படியும் ..
நலமும் கொஞ்சம் கெடுக்கும்..
ஆய்ந்து நாமும் அறிவோம் ..
இயற்கையான இலையில் ..
செயற்கைப் பொருட்கள் இல்லை..
உயிர் வளியும் உண்டு இலையில் ..
உயர் தனிமங்களும் அதில் உண்டு ..
உரைக்கின்றனர் நம்முன்னோர்
உயர் வாழ்வு சொன்ன பெரியோர் ..
நலமது பெறவே நாமும் ..
நாடி உண்போம் இலையில் ..
தண்ணீர்ச் சிக்கனம் உண்டாம் ..
பொருள் செலவும் குறைவாம் ..
தூய்மை காக்கும் வழியாம் ..
வேலை கூடக் குறைவாம் ..
உண்ட பிறகு இலைகள் ..
கால்நடைக்குச் சிறந்த உணவாம் ..
உயிர் வளர்க்கும் வழியாம்
கோபம் தணிக்கும் வழியாம் ..
குணமும் வளர்க்கும் வழியாம்
முடிந்தவரைச் சொல்வோம் ..
வீட்டில் வைத்து வளர்ப்போம் ..
தினமும் இலையில் உண்போம்..
வாழை இலையில் உண்போம் ...
தெய்வானை,
மீஞ்சூர்.