உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
மனத்தைப் புண்ணாக்கும் மனிதர்க்கும்
நல்லதே செய்தாலும் நன்றியுரையாது
பதிலுக்கு தீங்கினையே நமக்குப் பரிசாகத் தருவோர்க்கும்
அரும்பாடுபட்டு
கடின உழைப்பாலே வெற்றிப்படியேறி நிற்கையிலே பாராட்டும் எண்ணமேதுமின்றி
பொறாமை கொண்டாடும் வஞ்சனையார்க்கும்
நாம் சொல்லுவதைத் திரித்து வேறுவிதமாகப் பிறர்க்கு ஓதி நமக்கும் அவர்க்கும்
பகையை உண்டாக்கி அதன்மூலம் இன்பம் காண்போர்க்கும்
கனியிருக்க காய்தனைக் கொய்வரோ?என்ற
வள்ளுவனின் கூற்றுக்கொப்ப நடக்காது இனிமையற்ற கடுஞ்சொற்களை கூர்ஈட்டியாய் நம்மீது இரக்கமின்றி எய்வோர்க்கும்
பதிலுக்கு நாம் திருப்பி செய்யவேண்டியது என்னவெனில்
ஒன்றுமே இல்லை!
அவர் நாணுமாறு நல்லனவற்றை அவர்க்குச் செய்துவிடுவதொன்றேயாகும்!
த.ஹேமாவதி
கோளூர்