Header Ads Widget

Responsive Advertisement

நிழற்படம்



நினைவுகளின் நிஜமாக
நிஜங்களின் நினைவாக
நினைவுகளைத் தூண்டி நிற்கும் நிஜத்தின் எதிரொளி.

செல்லரித்துப் போனாலும்
வண்ணமின்றிப் போனாலும் புல்லரித்து நிற்க வைக்கும் புரியாத புதுமை.

எத்தனை முறை பார்த்தாலும் எதிரில் கூட பார்த்தாலும்
பார்க்கப் பார்க்க பார்க்கத் தூண்டும் பசுமை நினைவுகள்.

கலக்கத்தில் இருந்தாலும்
களைப்பாகத் தெரிந்தாலும்
புன்னகையை உதட்டினிலே மலரவைக்கும் மந்திரம்.

குழவியாக இருக்கையிலும்
கிழவியாகிச்  சிரிக்கையிலும்
வசீகரம் குன்றாத செயற்கையின் சாதனை.

நிழலாக இருந்தாலும்
நிஜமதனை வெளிப்படுத்தி
நிறைவுதனை பறைசாற்றும்
படமது தான் நிழற்படம்
பலமது தான் நிழற்படம்.

*சுலீ. அனில் குமார்*