Header Ads Widget

Responsive Advertisement

செய் நன்றி கொன்றார்



பட்டம் பார்த்து விதைத்து 

வந்தேன்,,,

பாத்தி கட்டி 

நட்டும் 

வந்தேன்,,, 

கட்டம் போட்டு வாழ்க்கையைத் தான்

திட்டம் போட்டு வாழ்ந்து 

வந்தேன்

நான் ,

திட்டம் போட்டு வாழ்ந்து

வந்தேன்,,,,


ஏர் பிடித்து நானுழுக

என் தம்பி எழுத்தெழுத,,,,

எழுத,

என் தலையில் எழுதவில்லையே

இறைவா!

நீ,

என் தலையில் எழுதவில்லையே,,,

அவனென்றும் உழுகவில்லையே

இறைவா!

அவனென்றும் உழுகவில்லையே,,,


பார்புகழ 

படித்து 

வந்தான் 

பகலிரவா நானுழுக,,, 

அவன்,

ஏர் பின்னும் வந்ததில்லையே இறைவா!

நான்,

யார் பின்னும் சென்ற

தில்லையே

இறைவா!

நான்,

யார் பின்னும்

சென்ற

தில்லையே,,,,


ஏர்பூட்டி நானுழுது

எருமை ரெண்டு மேய்த்தாலும் 

கூறுகெட்டு வாழவில்லையே

இறைவா!

நான்,

ஊர் போற்றும் செல்லப் பிள்ளையே,,,,!

(விவசாயி),,,,,

இறைவா!

நான்,

ஊர் போற்றும்

செல்லப்

பிள்ளையே,,,,,!


தார் போட்ட ரோட்டிலே தடம் பார்த்து 

நடை பழக

தாரத்தோடு போக 

வைத்தேனே,,,,

இறைவா!

அவனை,

ஆதாரத்துடன் சேர்த்து வைத்தேனே,,,,


யார் வீட்டு திண்ணையிலோ

நான் கூனி கிடக்கின்றேன்

தேன் குளவி கொட்டுகின்றதே

இறைவா!

இதை,

இத்தனை நாள் வைத்திருந்தேன் மறைவா,,,,

கதை,

இளையவர் 

செய் நன்றி கொன்றாரே இறைவா!


பாலா