Header Ads Widget

Responsive Advertisement

ஆடிப் பெருக்கு


வெள்ளாம போடணும்

வெளச்சலப் பாக்கணும்


அதுக்கு

வெதயத் தூவணும்


அதுதான் 

ஆடிப்பெருக்கு:


ஆற்றங்கரை யோரம்

ஆனந்தம் கொள்ளவே...


திருமஞ்சனம் நடக்கட்டும்

தாலிப் பொட்டும்

தஞ்சாவூர் பட்டும்

ஆத்துல விட்டாதான்

பெருமாளுக்குச் சீதனமாம்;

தவறாம செஞ்சுருங்க:


கொல்லிமலையில நீராடி

அரப்பளிசுவரரை 

மறக்காம தொழுதிடுங்க;


எல்லா நாளும்

ஆத்துல (வைகை)

நீர் பெருக்கெடுத்து ஓடுதோ என்னவோ...

இன்னைக்கு நிச்சயம்

பெருக்கெடுக்க வைப்பாங்க

கொஞ்ச நேரம்;


சாத்திரமுன்னு:


எல்லாம்

தவறாம நடக்குது

தப்பாய்


நிஷமாய் மாற

நாமென்ன செய்ய...


எட்டுவழிச் சாலையும்

வேணாம்....


டிஷிட்டல் இந்தியாவும்

வேணாம்....


விவசாயம் போதுமுங்க


மண்ணும் மக்களூம்

நலமென வாழ

ஆத்துல ஆறு பெருக்கெடுத்து ஓட....


மரத்தை அழிக்காதீர்...



ஆடி 18 மட்டுமல்ல

எல்லா நாளூம் 

பெருக்கமே.....


பெருக்குவோம் இயற்கையை


கூட்டுவோம் விவசாயத்தை


கழிப்போம்

கடந்த காலத்தை


வகுப்போம் எதிர்காலத்தை


நம்பிக்கையோடு.....

வாழ்த்துகள்


தமிழ் தங்கம்