கொட்டிக் கிடக்கிறது வாய்ப்புகளும் வழிகளும் ...
நம் முன்னே
எப்போதும் ....
கரடுமுரடான பாதைகளும் ..
சீர்திருத்திய சாலைகளும் ...
தேர்ந்தெடுத்துக்
கொள்ள தெளிவு மட்டும் போதும் ....
சாதிக்கத் துடித்தால் கரடுமுரடு பாதை...
மனம் கொஞ்சம் சலித்தால் ...
சாலை வழிப் பாதை....
சாதனைகள் மட்டும் ..
வாழ்க்கையா என்ன?
சாதாரண
வாழ்க்கையும்...
சாதனைகள் தானே!
தெய்வானை,
மீஞ்சூர்.