Header Ads Widget

Responsive Advertisement

மந்திரப்புன்னகை



நிரந்தரமானது எதுவுமில்லை 

உன் நினைவுகள் எனக்கு போதவில்லை,,,

உன்னை

மறுதரம் பார்க்க முடியவில்லை

என்,

மனதினில் 

ஏனோ பெருங்கவலை,,,


ஆயிரம் கைகள் அனைத்தாலும் உன் புன்னகை

காணத் தேடிகிறேன்,,,

காகித ஓடத்தின் பயணத்திலே

நான் கரையைத் தேடி அலைகின்றேன்,,,


நீ,

போகின்ற வழியும் சொல்லவில்லை

போனது 

எனக்கும் தெரியவில்லை,,,

பாவி என் கண்களும் 

மேவிய 

புன்னகை பார்த்திடத்தானே துடிக்கின்றது,,,

அதை கேட்டு 

இரண்டும்

என்னை அடிக்கின்றது,,,


காலங்கள் 

கடந்து போனதம்மா,,,

தாடியும், 

நினைவும்  போட்டியில் 

தானாய்

வளர்ந்ததம்மா,,,

தேனான வாழ்வு

வீணாகிப் போக

தெம்மாங்கு பாடி ரோட்டினிலே,,,,

என் சோகமும் காலமும் வந்தது

அந்த 

பாட்டினிலே,,,


பாட்டை 

கேட்டவள் 

அவளும் 

பக்கத்திலே

பாவம்,

என் மாற்றத்தை காண முடியவில்லை,,, எனக்கும் கேட்க வழியுமில்லை,,,

நிலமையும் 

எனக்கோ சரியில்லை,,,

பையிலெடுத்த பணமொன்றை

என் 

கையில் வைத்து புன்னகைத்தாள்!

மந்திரப்

புன்னகையாய்!!


கல்லான அகலிகை , 

ராமன் 

காலடி பட்டு பெண்ணானாள்,,,

பாவம் , 

இவனோ அவள் மந்திரப் 

புன்னகை பட்டு  

கல்லானான்,,,,


இளகிய 

மனதும் 

கல்லாக 

இரு வழி கரைய நில்லாமல்

யாரென்று நானும் சொல்லாமல்

நடையை கட்டினேன் நில்லாமல்,,,

ஆக்கமும் கேடும் கண்ட 

என் கண்கள் தேடும் என்றென்றும்

அவள்

மந்திரப்புன்னகை பாடும்,,,,,


பாலா