காலத்தின் ஆட்டம் புரிந்தவர் எத்தனைபேர்?
கண்மூடி ஆட்டங்கள் போடுவோர் எத்தனைபேர்?
தானென்ற அகந்தை கூடாதெனத் தெரிந்தும் அகந்தைக்குள் ஆணவமாய் ஆடுவோர் எத்தனைபேர்?
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓர்இனம் என்றிருந்தும் சாதியென்றும் இனமென்றும் வட்டத்துள் நிற்பவர்கள் எத்தனைபேர்?
தனக்கு மற்றவரெல்லாம் அடிபணிந்து வாழவேண்டும் எனக் கொக்கரிப்பவர்கள்
எத்தனைபேர்?
இவர்கள் எல்லோரையும் பாடம்புகட்டவே நிலையாமை காத்திருக்கு!தோன்றி மறுகணமே மறையும் நீர்க்குமிழி போலத்தான் இந்த மனிதப் பிறவி என்றுணர்த்திடவே இருக்கிறது நிலையாமை!
த.ஹேமாவதி
கோளூர்