நீ வராமல் நானா? நிலவில்லாத வானா?
இனிப்பில்லாத தேனா?
இசையில்லாத பன்னா?
இங்கு,
ஊரெல்லாம்
வந்து போக,,,
உன்னைக் காணாது மனம் நொந்து போக,,,
தேரிழுத்த வடம் போல
துவண்டு நானும் நிற்கின்றேன்,,,
என் மனம் யோசனை என்னிடம்
சொல்ல,,,
உன் மனம்
உந்தன் கண்ணிடம் மெள்ள,,,
உள்ளதை
சொல்ல பாதமும் தேய,,,
உள்ளங்கள் ரெண்டும் வெள்ளத்தில்
பாய, .,,,,
உனக்கொரு சொந்தம் எனக்கொரு சொந்தம் ஊருக்குள் பேச,,,
மெளணத்தின் கண்கள்
மாயத்தில்
ஏனோ,,,?
நிமிர்ந்திட நினைத்தும் இன்னும் தயக்கத்தில் தானோ,,,!
ஆறுகள் எல்லாம் நீர் போகும் பாதை
நான் நின்ற வேளை யார் போகும் பாதை,,,
கடைகண்
பார்க்க களவொழுக்கம் கண்டேன்,,,,
பேசிய பின் தான் நல்லொழுக்கம் என்றேன்,,,
வாய்மொழியாலே தாய் மொழி சிந்த
சேய் போல என்னை தாலாட்ட கேட்டேன்,,,
யார் கூட நானும் ஊர்கோலம் போக நீயில்லா நானும் நிலவில்லா வானே!
நில்லாமல் போனால் இந்நாளும்
வீணே,,,
பாலா