சில்லென அடிக்கும் காற்றே சிலிர்ப்பைத் தருகிறாய் நீ ...
மெல்லென மேனி தொட்டு இதம் தந்து போகிறாய் நீ ....
சட்டென அயர்ச்சி நீக்கி உற்சாகம் உலவ வைக்கிறாய் நீ ...
சுற்றிலும் தழுவிக்கொண்டு சுகம் தந்து செல்கிறாய் நீ ...
மாலை நேர கடற்கரையில்
மகிழ்ச்சி பெற வைக்கிறாய் நீ ...
காதலர்க்கு இடையில் புகுந்து கலகமும் செய்கிறாய் நீ...
சோலை மலர் சுகந்தம் எல்லாம் சுமந்து வந்து தருகிறாய் நீ..
மகிழ்ச்சியில் மனம் குளிர தென்றலாய் வருகிறாய் நீ ...
மாலை வரும் போதெல்லாம் கொஞ்சம் மறக்காமல் வந்து செல்லு ..
தெய்வானை,
மீஞ்சூர்.