Header Ads Widget

Responsive Advertisement

களவொழுக்கம்


 என்விழி பேசும் மௌனமொழியை விட

என் உதடுகள் பேசும்

சொல்மொழியைக்

கேட்க உனக்கெவ்வளவு ஆசையோ அதைவிடவும் பேராசை எனக்கும்தான் கண்ணா!

காதலிக்கிறேன் என செவ்வாயில் சொல்லுதிர்த்து உன்செவிகளிலே காணிக்கையாக்க ஆசைதான் இருக்கிறது!ஆனாலும் என்னசெய்வேன்!

என்விழிகளுக்குரிய 

தைரியம்

என்செம்பவள உதடுகளுக்கில்லையே

பெண்மைக்குரிய நாணம்வந்து தடுக்கிறதே!

ஆண்மகன் உன்னைக் கண்டாலே நாணம் வந்து தொற்றிக்கொள்ள

என்உதடுகளின் செம்பவளத்தை விழிகளேற்று தைரியமாய் மொழியாற்ற செம்பவளத்தையிழந்த

உதடுகளோ நிறத்தோடு தைரியமும் இழந்து நாணத்தைச் சுமந்து 

ஊமையாகிப் போயின!நாணத்தைத் தந்தவன் நீதானே!

பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவித்தால் எப்படி?

நீதந்த நாணத்தின் விளைவே என்னுதடுகளின் மௌனம்

இப்போதென்ன சொல்லப் போகிறாய்?


த.ஹேமாவதி

கோளூர்