Header Ads Widget

Responsive Advertisement

களவொழுக்கம் -- அனில் குமார்


புன்னை மரம் சாட்சியாக

புன்னகையோ காட்சியாக

மன்னவனோ கைபிடிக்க 

மங்கையவள் நாணி நிற்க;


என்னவளே என்றவனை ஏறெடுத்துப் பார்த்தபின்னே

கண்ணாளா என்றவளின்

கால் விரலோ கோலமிட;


அனுமதி தான் என்று எண்ணி 

அணைக்கத் தான் முயன்றிடவே

தடையாக நின்றதங்கே தையலவள் வளைக்கரங்கள்.


முடியாத முயற்சியது முடிவல்ல என்றுணர

கடியாத கண்களினால்

காரணத்தைத் தேடி நிற்க;


மடியாத பண்பதனை மதித்து நின்ற மங்கையவள்

மணம் முடிக்கும் நாளுக்காய் காத்திருக்கும் நிலை விளக்க;


களவிலே கூட ஒழுக்கத்தைப் பேணி நின்ற

காதலதை நினைக்கையிலே கண்களிலே இருதுளிகள்.


'இந்தாம்மா பால்' என்ற குரல் கேட்டு நான் விழித்து

கனவா கண்டதெல்லாம் என்று நானும் விழி சுழற்ற;


கனவாக இருந்தாலும் களவொழுக்கம் கற்பித்த

கற்பு நெறி கண்டு நானும்

கனவுக்காய் மகிழ்கின்றேன்.


*சுலீ. அனில் குமார்.*