திண்ணைகள் இன்றில்லை..!
திருடர்கள்
வந்தமரக்கூடும்..பயம்🤷♀
உபசரிப்புகள்
இன்றில்லை!
உபத்திரவங்கள்
ஆகிவிடுமோ...பயம்🤷♀
பாராட்டுதல்கள்
இன்றில்லை!!
கண்பட்டதாய்
கதைசொல்லி..
பின்பழிக்கக்கூடும்..பயம்..🤷♀
வழிப்போக்கர் அருந்த
நீர்தர தயக்கம்..!
தனிமை அறிந்து
தகாதது ஆகிவிடுமோ..பயம்🤷♀
நிலைசொல்லி
மனம்தேறும்
நிலையில்லஇன்று.!
.போகவிட்டு
பின் இகழக்கூடும்...பயம்
🤷♀
அடிபட்டுக்கிடந்தாலும்
உதவிட..மனமில்லை..!
ஊர்ஊராய் அலையவிடக்கூடும்........பயம்...🤷♀
வலிப்பு வந்ததால்
முதலுதவி செய்ய....
தூரத்துப்பார்வைக்கு
கொலைமுயற்சி....!
கைது....உதவிசெய்யக்கூட
பயம்...🤷♀
சொந்தக்கருத்தை
மனம்திறந்து
சொல்லமுடிவதில்லை...!
எந்த கருத்தை எப்படி
திசைதிருப்புவரோ...பயம்
🤷♀
துணிந்து செயல்கள்
முன்னெடுத்துச்
செய்யமுடிவதில்லை..!
எந்த அம்பு..எப்போது
எப்படி..பாயுமோ...பயம்🤷♀
அச்சமில்லை....!
அச்சமில்லை...!
அச்சமில்லை.....!
என்றானே ...பாரதி...
அன்று..!
அச்சம் தவிர ஏதும்
மிச்சமில்லை..!
மிச்சமில்லை..!
மிச்சமில்லை....இன்று..!
🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀🤷♀
.......தெய்வானை.
மீஞ்சூர்.